பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார்.
முன்றுறை என்பது ஊர் பெயர்.
அரையன் என்ற பட்டம் பெற்றவர் என்றும் கூறுவர் சிலர்.
அரையன் என்ற சொல் அரசனைக் குறிக்கும்.
முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசனாக இருக்கலாம் அல்லது அரையன் என்பது புலவரின் குடிபெயராக இருக்கலாம்.
இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தை சேர்ந்தவர் என அறிய முடிகிறது.
பழமொழி நானூறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
இது நானூறு பாடல்களைக் கொண்டது.
ஒவ்வொரு பாடலின் இறுதியில் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர் பெற்றது.
பாவகை = வெண்பா
இந்நூலை பதிப்பித்தவர் = செல்வசேகர முதலியார்
இதில் கூறப்பட்டுள்ள பழ மொழிகள் இலக்கியம் சார்ந்தவையாகும்.
ஆற்றுணா வேண்டுவது இல்” என்பதற்கு “கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்” என்பது பொருள்
உள்ளடக்கிய பொருள்வகை = அறம்
வேறு பெயர்கள்
பழமொழி
உலக வசனம்
முதுமொழி
முதுசொல் (தொல்காப்பியர்)
பெயர்க்காரணம்
ஒரு கதையோ, வரலாற்று நிகழ்வோ கட்டி உரைக்கப்பட்டு பாடலின் இறுதியில் பழமொழி நீதி சுட்டப்படுவதாலும், நானூறு பாடல்களை உடையதாலும் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.
நூல் பகுப்பு முறை
இந்நூலின் பெரும் பிரிவுகள் = 5, இயல்கள் = 34
பிரிவு 1 = கல்வி, ஒழுக்கம், புகழ் பற்றியது (9 இயல்கள்)
பிரிவு 2 = சான்றோர், நட்பின் இயல்பு பற்றியது (7 இயல்கள்)
பிரிவு 3 = முயற்சி, பொருள் பற்றியது (8 இயல்கள்)
பிரிவு 4 = அரசர், அமைச்சர், பாடல் பற்றியது (6 இயல்கள்)
பிரிவு 5 = இல்வாழ்க்கை, உறவினர், வீடுநெறி பற்றியது (4 இயல்கள்)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள முப்பெரும் அறநூல்கள்
திருக்குறள்
நாலடியார்
பழமொழி நானூறு
தொல்காப்பியர் பழமொழியை “முதுமொழி” என்கிறார்.
பழமொழி என்ற சொல் முதன் முதலில் அகநானூறில் வருகிறது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மிகுதியாக வரலாற்று குறிப்புகளை கூறும் நூல் இதுவே