தத்துவார்த்தம் பிணைந்த
கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி.
தமிழ்ப் புதுக்கவிதையின்
தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி.
வாழ்க்கை
பிச்சமூர்த்தி கும்பகோணத்தில்
தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார்.
தத்துவத்தில் பட்டம்
பெற்று, சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
1925 முதல் 1938 வரை
வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப்
பணிபுரிந்தார்.
பிச்சமூர்த்தி, நவ இந்தியா
பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார்.
இவரின் எழுத்துக்கள்
சுதேசமித்திரன், சுதந்திர சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் வெளிவரத்தொடங்கின.
இந்தத் தத்துவ மரபில்
வாழ்ந்து வந்த செழுமையின் உள்தூண்டல் அவரது படைப்பு மனோபாவத்தின் அடிநாதமாக இழையோடியது.
"இலக்கியமும் நம்மைப்
போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ..."
என நம்பினார். இந்த நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாக வே.பிச்சமூர்த்தியின் படைப்புகள்
வெளிப்பட்டன.
புதிய படைப்புச் சூழலில்
மரபுக்கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன.
பாரதியாரின் வசன கவிதையைத்
தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந.பிச்சமூர்த்தி ஈடுபட்டார்.
எனவே, அவர் புதுக்கவிதையின்
தந்தை’ என்று போற்றப்படுகிறார்.
புதுக்கவிதையை
"இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை
என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர்.
ந. பிச்சமூர்த்தி தொடக்க
காலத்தில் வழக்குரைஞராகவும் பின்னர் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும்
பணியாற்றினார் ஹனுமான், நவஇந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசிரியராகவும் இருந்தார்.
இவர் புதுக்கவிதை, சிறுகதை,
ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள் ஆகிய இலக்கிய வகைமைகளைப் படைத்தவர். இவரின் முதல் சிறுகதை
- 'ஸயன்ஸூக்கு பலி" என்பதாகும்.
1932 இல் கலைமகள் இதழ்
வழங்கிய பரிசைப் பெற்றார். பிக்ஷுஷு", ரேவதி ஆகிய புனைபெயர்களில் படைப்புகளை எழுதினார்.
சிறப்பு பெயர்கள்
சிறுகதையின் சாதனை
புதுக்கவிதையின் முன்னோடி
தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின்
தோற்றுநர்
புதுக்கவிதையின் முதல்வர்
புதுக்கவிதை இயக்கத்தின்
விடிவெள்ளி
புதுக்கவித இரட்டையர்
– ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன் (அழைத்தவர் - வல்லிக்கண்ணன்)
புனைப் பெயர்
ரேவதி
பிச்சு
ந.பி
படைப்புகள்
சிறுகதைகள்
பதினெட்டாம் பெருக்கு
நல்ல வீடு
அவனும் அவளும்
ஜம்பரும் வேட்டியும்
மாயமான்
ஈஸ்வர லீலை
மாங்காய்த் தலை
மோகினி
முள்ளும் ரோசாவும்
கொலுப்பொம்மை
ஒரு நாள்
கலையும் பெண்ணும்
இரும்பும் புரட்சியும்
பாம்பின் கோபம்
விஞ்ஞானத்திற்குப் பலி
(முதல் சிறுகதை)
இரட்டை விளக்கு
புதுக்கவிதை
கிளிக்குஞ்சு
பூக்காரி
வழித்துணை
கிளிக்கூண்டு
காட்டுவாத்து
புதுக்குரல்கள் (தமிழின்
முதல் புதுக்கவிதை தொகுதி)
காதல் (இவரின் முதல்
கவிதை)
உயிர்மகள் (காவியம்)
ஆத்தூரான் மூட்டை
மேற்கோள்
வாழ்க்கைப்போர்
முண்டி மோதும் துணிவே
இன்பம்
உயிரின் முயற்சியே வாழ்வின்
மலர்ச்சி
ஜீவா! விழியை உயர்த்து
சூழ்வின் இருள் என்ன
செய்யும்
கழகு பெற்ற வெற்றி நமக்கும்
கூடும்
சிறந்த தொடர்கள்
இலக்கியமும் நம்மைப்
போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ..."
என நம்பினார்.
எனக்கு எப்பொழுதும் உணர்ச்சிதான்
முக்கியம். தர்க்கரீதியான அறிவுக்கு இரண்டாவது இடம்தான் தருவேன்.
ஆகையால் எப்பொழுதுமே
ஒரு திட்டம் போட்டு குறிப்பிட்ட கருத்தை வற்புறுத்துவதென்ற எண்ணத்துடன் ஒன்றுமே நான்
எழுதவில்லை.
உணர்வே என் குதிரையாகி
விட்டபடியால் நான் ஒரு சமயம் நட்சத்திர மண்டலத்தில் பொன்தூள் சிதறப்பறப்பேன். ஒரு சமயம்
வெறும் கட்டாந்தரையில் "ஏபால்டில்" செய்வேன்.
என் மனதிலும் இந்த இரண்டு
அம்சங்கள் பின்னிக்கிடப்பதை நான் கவனித்திருக்கிறேன்.
ஒரு பகுதி சிறகு விரித்து,
சொல்லுக்குஎட்டாத அழகு ஒன்றை நாடி எப்பொழுதுமே பறந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பகுதியின் ஆட்சிக்கு
உட்பட்ட போதெல்லாம் வெறும் கற்பனையாகவே கதைகள் வருகின்றன.
மற்றொரு பகுதி எல்லோரையும்
போல் மண்ணில் உழலுகிறது.
அப்பொழுதெல்லாம்உலகின்
இன்ப துன்பங்களைப் பற்றி இயற்கையை ஒட்டிய முறையில் எழுதுகிறேன்"
"எழுதுவது ஒரு கலைஞனுக்கு
இயல்பானது... மல்லிகை பூப்பது போல, விதைகள் விழுந்து மரமாவது போல... அறிவுக்குப் புலப்படாத
பாலுணர்வின் தூண்டுதல் போல..."
பிற கவிஞர்களின் கருத்துக்கள்
பிச்சமூர்த்தியின் இலக்கிய
வெளிப்பாடுகள் நிறைவறாத துறவு மோகத்தின் இன்னொரு வடிகாலாக இருந்தது – கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன்
இயற்கையையும் வாழ்க்கை
அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான தத்துவ உண்மைகளைக் காணும்
முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும்
நூலில் வல்லிக்கண்ணன்