பழையனூர் என்னும் ஊரில்
திருவேங்கடம் – செண்பகம்க்கு 23.11.1921 அன்று பிறந்தார்.
இவருடைய இயற்பெயர்
இராசகோபாலன்.
கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட
பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன்
பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
மாற்றுப் பெயரில் சுருக்கமாக
சுரதா என்ற பெயரில் பல மாற்று கவிதைகளைை தொகுத்துள்ளார்.
செய்யுள் மரபு மாறாமல்
எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் பெற்றார்.
இதனால் இவரை உவமை புலவர் என சிறப்பித்துக்
கூறுகின்றனர்.
மேலும் இவர் சீர்காழி
அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.
சுரதா தமிழகக் கவிஞரும்
எழுத்தாளரும் ஆவார்.
அமுதும் தேனும், தேன்மழை,
துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
முழுக்க முழுக்கக்
கவிதைகளையே கொண்ட காவியம் என்ற இதழை நடத்தியதோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம்
போன்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார்;
தேன்மழை, துறைமுகம்,
மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார்.
இவர் தமிழக அரசின் கலைமாமணி
விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது
உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
கவிஞர் சுரதா யாரிடம் தமிழ்
இலக்கணங்களைக் கற்றார் - சீர்காழி அருணாசல தேசிகர்
சுரதாவின் முதல் நூல் -
சாவின் முத்தம்
தமிழக அரசு சுரதாவுக்குக்
கலைமாமணி என்னும் விருது வழங்கப்பட்ட ஆண்டு - 1972
சுரதாவின் தேன்மழை
நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அளித்த விருது - இராசராசன் விருது
சுரதாவின் படைப்புகளுக்கு
எடுத்துக்காட்டு - வார்த்தை வாசல், மங்கையர்க்கரசி, சிரிப்பின் நிழல்
சுரதா பாவேந்தர் பாரதிதாசனை
முதன்முதலில் கண்டு பழகிய நாள் - 1941 ஜனவரி 14
பாவேந்தர் தலைமையில் இயங்கிய
தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966இல் தலைவராகத் தேர்ந்தொடுக்கப்பட்டவர் - சுரதா
1941ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம்
நாள் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கி
இருந்து அவரின் கவிதைப் பணிக்குத் துணை நின்றார்.
பாவேந்தர் பாடல்களைப்
படியெடுத்தல்.
அச்சு பணிகளைை கவனித்தல்.
பாவேந்தர் நூல்
வெளியீட்டிற்கு துணைை நிற்றல்.
எனப் பல நிலைகளில் பாவேந்தர்
பாரதிதாசன் உடன் சுரதா தொடர்பு வைத்துள்ளார்.
கவிதை இயற்றுவதில் சுரதாவின் பங்கு
கவிஞர் சுரதாவின் சொல்லடா
எனும் தலைப்பில் அமைந்த கவிதையை புதுக்கோட்டையிிிலிருந்து வெளிவந்த பொன்னி எனும்
இதழ் 1947 ஏப்ரல் திங்கள் இதழில் வெளியிட்டுு இவரை பாரதிதாசனின் பரம்பரைக் கவிஞராக
அறிமுகம் செய்தது.
பாவேந்தர் புரட்சிக்கவி
நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந்த நாடகத்தில்
அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமை கவிஞர் சுரதாவை சாரும்.
அரசவைக் கவிஞராக நாமக்கல்
கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபோது அவரின் உதவியாளராக இருந்தார்.
திரைப்படத்துறையில் கவிஞர் சுரதாவின் பங்கு
சுரதாவின் கலை உணர்வை
தெரிந்துகொண்ட கு.ச. கிருஷ்ணமூர்த்தி என்பவர் இவரை திரைப்படத்துறைக்கு அறிமுகம்
செய்து வைத்தார்.
1944ஆம் ஆண்டு
மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதலாக உரையாடல் எழுதினார்.
கவிஞர் சுரதா மிகக் குறைவான
பாடல்களை எழுதியுள்ளார்.
சீர்காழி கோவிந்தராஜன்
அவர்களின் குரலில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார் கவிஞர் சுரதா அவைகள் பின்வருமாறு
“அமுதும் தேனும் எதற்கு நீ
அருகினில் இருக்கையிலே”
“ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா”
மேலும் இவர் நூற்றுக்கும்
மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.
எழுத்துப் பணியில் சுரதாவின் பங்கு
கவிஞர் சுரதாவின் முதல் நூல்
“சாவின் முத்தம்” இதனை V.R.M செட்டியார் என்பவர் 1946 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
மேலும் இவர் 1956 இல்
பட்டத்தரசி என்ற சிறுகாவிய நூலை வெளியிட்டார்.
1954 இல் கலைஞர்
கருணாநிதியின் முரசொலி என்ற இதழில் தொடர்ந்து கவிதைகளைை எழுதி வந்தார்.
சிறப்பு பெயர்கள்
உவமைக் கவிஞர் (ஜெகசிற்பியன்)
கவிஞர் திலகம் (சேலம் கவிஞர்
மன்றம்)
தன்மானக் கவிஞர் (மூவேந்தர் முத்தமிழ்
மன்றம்)
கலைமாமணி (தமிழக இயலிசை நாடக
மன்றம்)
கவிமன்னர் (கலைஞர்
கருணாநிதி)
படைப்புகள்
தேன்மழை(கவிதைத் தொகுதி,
தமிழ் வளர்ச்சி கழகப் பரிசு)
சிரிப்பின் நிழல்(முதல்
கவிதை)
உதட்டில் உதடு
பட்டத்தரசி
சுவரும் சுண்ணாம்பும்
துறைமுகம்
வார்த்தை வாசல்
எச்சில் இரவு
அமுதும் தேனும்
வினாக்களும் சுரதாவின்
விடைகளும்
நெய்தல் நீர்
எப்போதும் இருப்பவர்கள்
சாவின் முத்தம் (முதல் நூல்)
கலைஞரைப் பற்றி உவமைக்
கவிஞர்
சிறந்த சொற்பொழிவுகள்
சுரதா கவிதைகள்
சொன்னார்கள்
தொடாத வாலிபம்
தமிழ்ச் சொல்லாக்கம்
நெஞ்சில் நிறுத்துங்கள்
புகழ்மாலை
பாவேந்தரின் காளமேகம்
முன்னும் பின்னும்
மங்கையர்க்கரசி
வார்த்தை வாசல்
வெட்ட வெளிச்சம்
சிக்கனம்
பாரதிதாசன் பரம்பரை
கட்டுரை
முன்னும் பின்னும்
இதழ்
காவியம்(முதல் கவிதை இதழ்,
வார இதழ்)
இலக்கியம்(மாத இதழ்)
ஊர்வலம்(மாத இதழ்)
சுரதா(மாத இதழ்)
விண்மீன்(மாத இதழ்)
கவிஞர் சுரதா பெற்ற சிறப்புகள்
1969 இல் தேன்மழை என்ற
சுரதாவின் கவிதை நூலுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
1972 இல் தமிழக அரசு
“கலைமாமணி” என்ற விருது வழங்கி சிறப்பித்தது.
1978 இல் ம.கோ. தலைமையில்
நடைபெற்ற அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிி சிறப்பித்தது.
தமிழக அரசின் முதல்
பாவேந்தர் நினைவுப் பரிசு பெற்றவர்
வ.ரா (வ.ராமசாமி) = மற்றொரு
பாரதி பிறந்து விட்டான்
தமிழக அரசு சுரதாவின்
நூல்களை நாட்டுடைமையாக்கி அவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் பரிசுத் தொகையாக
வழங்கியது.
1982 இல் சுரதாவின் மணி
விழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் 60 ஆயிரம் பரிசு
தொகையாக வழங்கியது.
1982 இல் சுரதாவின் கவிதை
பணிகளை பாராட்டி குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் “கவியரசர் பட்டம்”
வழங்கப்பட்டது.
1987 இல் மலேசியாவில்
நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.
1990 இல் கலைஞர் அரசு
பாரதிதாசன் விருது கவிஞர் சுரதாவிற்கு வழங்கியது.
1990 கேரளாவில் மகாகவி
குமரன் ஆசான் விருது கவிஞர் சுரதாவுக்கு வழங்கப்பட்டது.
சுரதாவின் தேன்மழை நூலிற்கு
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் ரூபா ஒரு லட்சம் “ராசராசன் விருது வழங்கியது”.
சுரதாவின் மறைவு
கவிஞர் சுரதா தன்னுடைய 84
ஆம் வயதில் 20-06-2006இல் செவ்வாய்க்கிழமை சென்னையில் உடல் நலக்குறைவால் இயற்கை
எய்தினார்.
சுரதாவின் நினைவாக
29-09-2008 இல் சென்னையில் சுரதாவிற்கு நினைவுச் சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி
அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் இச்சிலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
சார்பில் அமைக்கப்பட்டது.
கவிஞர் சுரதாவின் நினைவாக
அவர் இயற்றிய நூல்கள் மற்றும் கவிதைகள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்
பாடப் பகுதிகளில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுகள்
தேன்மழை – தமிழக அரசின்
பரிசு, கலைமாமணி விருது – தமிழக அரசு,
பாவேந்தர் பாரதிதாசன்
விருது, கவியரசர் பட்டம், கேரள மகாகவி குமரன் ஆசான் விருது, தேன்மழை என்ற நூல் -
இராசராசன் விருது.
சிறந்த தொடர்கள்
தண்ணீரின் ஏப்பம் தான்
அலைகள்
தடைநடையே அவர் எழுத்த்தில்
இல்லை வாழைத் தண்டுக்கோ தடுக்கின்ற கணுக்கள் உண்டு