ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் வீதம் 150 பாடல்கள் அமைந்துள்ளன
அகத்தினை கருத்துக்கள் அமைந்த இப்பாடல்களில் வடசொற்களும் சில கலந்து வரும்
திணை = ஐந்து அகத்திணைகளும்
திணை வைப்பு முறை = குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்
பாவகை = வெண்பா
உள்ளடக்கிய பொருள்வகை
= அகம்
திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது.
இந்நூல் ஐந்து நிலத்திணைகளினது பின்னணியில் இயற்றப்பட்டுள்ளது
வரதட்சனை வாங்குவது தவறு என்று கூறும் நூல்
குறிஞ்சி à 1 தொடக்கம் 31
வரை = 31 பாடல்கள்
நெய்தல் à 32 தொடக்கம் 62 வரை = 31 பாடல்கள்
பாலை à 63 தொடக்கம்
92 வரை = 30 பாடல்கள்
முல்லை à 93 தொடக்கம்
123 வரை = 31 பாடல்கள்
மருதம் à 124 தொடக்கம்
153 வரை = 30 பாடல்கள்
பெயர்க்காரணம்
திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றைம்பது பாடல்கள் கொண்டதால் திணைமாலை நூற்றைம்பது
எனப் பெயர் பெற்றது.
பொதுவான குறிப்புகள்
நூலாசிரியர் கணிமேதாவியார் சமண சமயத்தார். ஆனால் சமண சமயத்தார் வெறுத்து ஒதுக்கிய
காதல், மணம், குடும்பம் போன்றவற்றின் மீது கொண்ட வெறுப்பு நீங்குமாறு இதனை படைத்துள்ளார்.
இந்நூலின் ஆசிரியரே ஏலாதி என்னும் நூலையும் எழுதியுள்ளார்.
இவர் பாண்டிய வேந்தன் ஒருவனால் ஆதரிக்கப்பட்டவர்.
பதினெண்கீழ்க்கணக்கு அகநூல்களில் இந்நூலே பெரியது.
இப்பாடலின் சில கருத்துக்கள் சுந்தரர் தேவாரத்திலும், மாணிக்கவாசகரின் திருக்கோவையாரிலும்
காணமுடிகிறது.
நூலில் உள்ள மொதப் பாடல்கள் = 153
மூன்று பாடல்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை
முக்கிய அடிகள்
ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக
இருகடரும் போந்தன என்றார்
பொருள் பொருள் என்றால் சொல்
பொன்போலப் போற்றி
அருள் பொருள் ஆகாமையாக – அருளால்
வளமை கொணரும் வகையினால் மற்றோர்
இளமை கொணர இசை
நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்நாட
கோள்வேங்கை போல்கொடியார் என்ஐயன்மார் – கோள்வேங்கை
அன்னையால் நீயும், அருந்தழையாம் ஏலாமைக்கு
என்னையோ? நாளை எளிது
பாலையாழ்ப் பாண்மகனே! பண்டுநின் நாயகற்கு
மாலையாழ் ஓதி வருடாயோ? - காலையாழ்
செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்மொழிக்கு
நையும் இடமறிந்து நாடு
கைந்நிலை
(ஐந்திணை அறுபது)
ஆசிரியர் = மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லாங்காடனார்
பாடல்கள் = 60 (5*12=60)
திணை = ஐந்து அகத்திணைகளும்
பாவகை = வெண்பா
இதிலும் வடசொற்கள் பல கலந்துள்ளன.
உள்ளடக்கிய பொருள்வகை
= அகம்
பெயர்க்காரணம்
கை = ஒழுக்கம்
ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.
பொதுவான குறிப்புகள்
இந்நூலின் சில பாடல்கள் சிதைந்து விட்டன
தற்போது உள்ளவை 43 வெண்பாக்களே
வடசொல் கலப்பு மிகுந்த நூல்
ஆசிரியர் பாண்டியனை “தென்னவன் கொற்கை” என்னும் தொடரால் குறிப்பிடுகிறார்
கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூல்
தொகுதியில் அடங்கிய ஒரு நூல். இத் தொகுப்பில் காணப்படும் ஆறு அகப்பொருள் நூல்களுள்
இதுவும் ஒன்று.
இஃது அறுபது பாடல்களால் ஆனது. ஐந்து தமிழர் நிலத்திணைப் பிரிவுகளைப் பின்னணியாகக்
கொண்டு பாடல்கள் வெண்பா பாவகையில் உள்ளன.
இதன் காரணமாக இதற்கு ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு. இதை இயற்றியவர் புல்லங்காடனார்
என்னும் ஒரு புலவர்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் உரை இந்நூலுக்கு உள்ளது. கை என்றால் ஒழுக்கம்.
நிலை என்றால் தன்மை.
ஆகவே, ஐந்திணையின் ஒழுக்க நிலையைக் கூறும் நூல் என்னும் பொருளில் இந்நூலின் பெயர்
கைந்நிலை என அமைந்துள்ளது. இந்நூலில் ஆசை, பாசம், கேசம், இரசம், இடபம், உத்தரம் போன்ற
வடசொற்கள் கலந்து காணப்படுகின்றன.
கைந்நிலை நூலில் 60 பாடல்கள் உள்ளன. குறிஞ்சி – 12, பாலை – 7, முல்லை – 3, மருதம்
– 11, நெய்தல் - 12
ஆகிய 45 பாடல்கள் முழுமையான வடிவில் உள்ளன. பிற செல் அரித்த நிலையில் சிதைந்துள்ளன.
மேற்கோள்
ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக்
குற்றம் ஒரூஉம குணத்தளாக் – கற்றறிஞர்ப்
பேணும் தகையாளாக் கொண்கன் குறிப்பறிந்து
நாணும் தகையளாம் பெண்
ஔவையார் பாடல்கள்
தொடர்பான செய்திகள்
எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு
நூல்களில் இவரது பாடல்கள் 59 உள்ளன.
அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள்.
அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார்.
இவருக்கு அடுத்த நிலையில் உள்ள நல்லந்துவனார் 40 பாடல் பாடியவராகக் காணப்படுகிறார்.
ஐங்குறுநூறு தொகுப்பில் 100 பாடல்கள் பாடிய புலவர்களை விட்டுவிட்டுப் பார்த்தால்,
சங்கநூல்களில் அதிக பாடல்கள் பாடிய புலவர்கள் வரிசையில் இவர் கபிலர், பரணர் ஆகியோருக்கு
அடுத்த நிலையில் உள்ளார்.
ஔவையாரால்
பாடப்பட்ட அரசர்கள்
சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில்
தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவரும் நண்பர்களாகக் கூடி மகிழ்ந்திருக்கக் கண்டு, வானத்து
மீன்கள் போலவும், மழையின் திவலைகள் போலவும் உயர்ந்தோங்கிப் பொலிக என வாழ்த்தினார்.
வள்ளல்கள்
அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி ஆகிரோரை ஔவை பல பாடல்களில்
போற்றியுள்ளார்.
மூவேந்தர் பறம்புமலையை முற்றியிருந்தபோது அவன் வளர்த்த குருவிப் பறந்து சென்று
நெற்கதிர்களைக் கொண்டுவந்து தந்து பாரிக்கு உணவளித்தனவாம்.
இந்த வள்ளுவன் தன் தகுதிக்கு அரிசி தருவது இழிவு எனக் கருதி போர்க்களிறு ஒன்றைப்
பரிசாகத் தந்தானாம். இதனைத் தேற்றா ஈகை எனக் குறிப்பிட்டு ஔவை வருந்துகிறார்.
மூதுரை
மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் – மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு
பொருள்
ஒப்பிட்டு பார்க்கும் போது, அரசனை விட, கசடறக் கற்றவனே மேலானவன். ஏனென்றால், அரசனுக்கு அவன் தேசத்தைத் தவிர வேறெங்கும்
சிறப்பு இல்லை. ஆனால் கற்றவனுக்கோ அவன் செல்லுமிடமில்லாம்
சிறப்பு.
சொல்லும் பொருளும்
மாசற்ற - குறை இல்லாமல்
சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்து
தேசம் - நாடு
ஒளவையார்
மூதுரை - ஒளவையார் எழுதிய நீதிநூல்களில் இதுவும் ஒன்று.
வாக்குண்டாம் எனது தொடங்குவதால் இந்நூலை "வாக்குண்டாம்" எனும் பெயரால்
அழைப்பர்.
இதில் 31 வெண்பாக்கள் உள்ளது.
பழமையான கருத்துக்களை கூறுவதால் மூதுரை என்று அழைக்கப்படுகிறது.
சங்ககாலம் முதல் பிற்காலம் வரை ஒளவையார் எனும் பெயரில் பெண்பாற்புலவர்கள் பலர்
வாழ்ந்துள்ளனர்.